அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
அலி காமேனி மறைவிற்கு பிறகு அவரது மகன் மொஜ்தபா காமேனி ஈரானின் உச்ச தலைவராக பொறுபேற்றார்.

புதிய உச்ச தலைவராக யாரை நியமித்தாலும் கொல்லுவோம் என அமெரிக்கா கூறியிருந்த நிலையில் மார்ச் 9 ஆம் தேதி இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் மொஜ்தபா காமேனி காயமடைந்திருப்பதாக ஈரான் தெரிவித்திருந்தது.
ஆனால் தற்போது மொஜ்தபா காமேனி முகம் சிதைக்கப்பட்டு, அடையாளம் காண முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மேலும் இந்தத் தாக்குதலின் விளைவாக அவரது ஒரு கால் அகற்றப்பட்டுள்ளதாகவும், கல்லீரல் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாகவே அவர் பொதுவெளியில் தோன்றாமல் ரகசிய இடத்தில் இருந்தே பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. உடல்ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் மனதளவில் தெளிவாக இருப்பதாகவும், தொலைபேசி வாயிலாக நாட்டை வழிநடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் ஈரான் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக அவரின் உடல்நிலை குறித்த எந்த தகவலும் இல்லை.