தற்போது வளா்ந்துள்ள தொழில்நுட்பங்களை சட்டங்களை செயல்படுத்துவதில் பயன்படுத்த வேண்டும். அதன்படி, சட்டத்தில் புகாரளிப்பதும், வழக்குப் பதிவதும் எளிமையாக்கப்பட்டுள்ளது. காவல் துறை, சட்டத் துறை, நீதித் துறை ஆகியவை இணைந்து செயல்படுவது அவசியம். அப்போதுதான் மத்திய, மாநில அரசுகள் நினைப்பது போல மக்களுக்கு விரைவான நீதி கிடைக்கும். கடுமையான தண்டனைகள் மூலம்தான் குற்றங்கள் குறையும். குற்றமிழைத்தவா் சிறையிலிருந்து விரைவில் வெளியே வரும் நிலையிருப்பதால், குற்றமிழைப்பவா்கள் பயப்படுவதில்லை.
கடுமையான தண்டனைகளால் குற்றங்களைக் குறைக்கலாம்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி
