கட்சிக் கொடிக்கம்பம் வழக்கில் திடீர் திருப்பம்: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் முடித்துவைப்பு | High Court closed petitions in party flag pole case

1372994
Spread the love

மதுரை: பொது இடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள கட்சி கொடிக் கம்​பங்​களை அகற்ற வேண்​டும் என்ற தனி நீதிப​தி​யின் உத்தரவை உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்​துள்​ள​தால், தனி நீதிபதி உத்​தர​வுக்கு எதி​ரான மேல்​முறை​யீடு மனுக்​களை உயர் நீதிமன்றம் உத்​தரவு எது​வும் பிறப்​பிக்​காமல் முடித்​து​வைத்​தது. இதையடுத்​து, பொது இடங்​களில் உள்ள கொடிக்​கம்​பங்​களை அகற்று​வதற்​கான தடை நீங்​கி​யுள்​ளது.

மதுரை​யில் 2 இடங்​களில் அதி​முக கொடிக் கம்​பங்​கள் அமைக்க அனு​மதி கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை விசா​ரித்த தனி நீதிப​தி, தமிழகம் முழு​வதும் பொது இடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள அரசி​யல் கட்சிகள், அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்​ற​வும், கொடிக் கம்​பங்​கள் வைப்​ப​தாக இருந்​தால் அரசிடம் அனு​மதி பெற்று பட்டா இடங்​களில் வைக்​க​வும் உத்​தர​விட்​டார். இந்த உத்​தரவை 2 நீதிப​தி​கள் அமர்வு உறுதி செய்​தது.

இந்த உத்​தரவை அடுத்து தமிழகம் முழு​வதும் பொது இடங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகளின் கொடிக் கம்​பங்​களை அகற்ற வருவாய்த் துறை, உள்​ளாட்சி அமைப்​பு​கள் நடவடிக்கை மேற்​கொண்​டன.

இந்​நிலை​யில், கொடிக் கம்​பங்​களை அகற்​று​வ​தில் இருந்து மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிக்கு விலக்கு அளிக்​கக் கோரி அக்கட்சியின் பொதுச் செய​லா​ளர் சண்​முகம் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​தார். இதை விசா​ரித்த 2 நீதிப​தி​கள் அமர்​வு, விசா​ரணையை 3 நீதிப​தி​கள் அமர்​வுக்கு மாற்​றியது.

இந்த மனுவை நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஆர்​.​விஜயகு​மார், எஸ்​.சவுந்​தர் அமர்வு விசா​ரித்து, “அனைத்து கொடிக் கம்பங்களை​யும் ஒரே இடத்​தில் நிறு​வலாம். இது தொடர்​பாக கட்​சிகள், அமைப்​பு​கள் இடை​யீட்டு மனுக்​களை தாக்​கல் செய்யலாம்.

அது​வரை கொடிக் கம்​பங்​களை அகற்​றும் விவ​காரத்​தில் தற்​போதைய நிலை தொடர வேண்​டும்” என்று உத்​தர​விட்​டது. இதையடுத்​து, திமுக, அதி​முக, மதி​முக, திக, விடு​தலை சிறுத்​தைகள், தவெக, இந்​திய கம்​யூனிஸ்ட், மக்​கள் வாழ்​வுரிமை கட்சி உள்​ளிட்ட 20-க்​கும் மேற்​பட்ட இடை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

இந்த மனுக்​கள் விசா​ரணை நிலு​வை​யில் இருந்த நிலை​யில், கொடிக் கம்​பங்​களை அகற்​றும் சென்னை உயர் நீதி​மன்ற உத்தரவை எதிர்த்து கதிர​வன் என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தார்.

இந்த மனு விசா​ரணைக்கு வந்​த​போது, அரசு தரப்​பில் “19 மாவட்​டங்​களில் பொது இடங்​களில் அனு​ம​தி​யில்​லாமல் வைக்​கப்​பட்​டிருந்த 100 சதவீத கொடிக்​கம்​பங்​கள் அகற்றப்​பட்​டுள்​ளன. 10-க்​கும் மேற்​பட்ட மாவட்​டங்​களில் 90 சதவீத கொடிக்​கம்​பங்​கள் அகற்​றப்​பட்​டுள்​ளன. சென்​னை​யில் 31 சதவீத கொடிக்​கம்​பங்​கள் அகறப்​பட்​டுள்​ளன” எனத் தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள், “உயர் நீதி​மன்​றம் அனைத்து தரப்​பை​யும் முழு​மை​யாக ஆராய்ந்​து​தான் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. அரசுக்​குச் சொந்​த​மான இடத்தை அரசி​யல் லாபத்​துக்​காக அரசி​யல் கட்​சிகள் பயன்​படுத்​து​வதை பார்த்​துக் கொண்​டிருக்க முடியாது. மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது” என உத்​தர​விட்​டனர்.

இந்​நிலை​யில், கொடிக் கம்​பம் வழக்​கின் மேல்​முறை​யீடு மனு மீதான விசா​ரணை நீதிபதி சுப்​பிரமணி​யம் தலை​மையி​லான மதுரை உயர்​நீ​தி​மன்ற 3 நீதிப​தி​கள் அமர்​வில் நேற்று நடை​பெற்​றது. பின்​னர் நீதிப​தி​கள், “கொடிக் கம்​பம் தொடர்​பான வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி​யின் உத்​தரவை உறுதி செய்​துள்​ளது.

எனவே, இந்த மேல்​முறை​யீட்டு மனு மீது இந்த அமர்வு எந்த உத்​தர​வை​யும் பிறப்​பிக்க முடி​யாது. தேவையெனில் மனு​தா​ரர்​கள் உச்ச நீதி​மன்​றத்தை அணுகி நிவாரணம் கோரலாம். மேல்​முறை​யீட்டு மனுக்​கள் முடித்து வைக்​கப்​படு​கின்​றன” என்று உத்தரவிட்டனர். இந்த உத்​தர​வையடுத்து தமிழகத்​தில் பொது இடங்​களில் உள்ள கொடிக் கம்​பங்​களை அகற்​று​வதற்​கான தடை நீங்​கி​யுள்​ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *