ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மதம் என்பதால் சிங்களர்கள் என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்தியாவும் அந்த நிலையை நோக்கிச் செல்கிறதோ என தோன்றுகிறது. இது அழிவுப்பாதை.
சமத்துவ சமவாய்ப்பு சமுதாயத்தை நோக்கிச் செல்லும் அறநிலைதான் என்னுடைய அரசியல்.
இந்த இயக்கம் தேர்தலில் ஈடுபடாது.

எங்களிலேயே யாரேனும் போட்டியிட விரும்பினால் எங்களுடன் ஒத்துப்போகும் கொள்கை உடையவர்களின் கட்சியோடு அவர்களின் சின்னத்தில் போட்டியிடுவார்கள்.
தேர்தலிலில் நிற்பது பணத்தைப் போட்டு பணத்தை எடுப்பது மட்டும்தானா. ஒரு புது சமுதாயத்தை உருவாக்குவதுதான் என்னுடைய இலக்கு. தேர்தல் என்பது இடையிடையே வரும் சடங்குகள். வேண்டுமானால் அதில் கலந்துகொள்வோம். ஆனால், அதுவே அரசியலல்ல.
இந்த கட்சியை தொடக்கி வைப்பது நானாக இருக்கலாம். தொடர்வது பொது மக்களாக இருக்கட்டும். ஓ.பி.எஸ் அத்தியாயம் ஓவர்!
அரசியல் என்பது ஒருவருக்கானதல்ல.
நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கிறது. ஓ.பி.எஸ்-க்காக உயிரையா விட முடியும்? வரும் தேர்தலில் திமுக-வுக்கும் விஜய்க்கும் தான் போட்டி’ என்றார்.