`கட்டடத்தை இடிக்க போறோம், வேற ஸ்கூல் பாருங்க’ – திடீரென தெரிவித்த பள்ளி நிர்வாகம்! போராடும் பெற்றோர் | chennai school forced all students to tc due to week school building

Spread the love

சென்னை அடையாறு காந்தி நகரில் இயங்கி வருகிறது குமார ராணி முத்தையா மெட்ரிகுலேஷன் பள்ளி. பனிரெண்டாவது வகுப்பு வரை இருக்கும் பள்ளியில் சில தினங்களுக்கு முன் அனைத்து பெற்றோரையும் நேரில் வரச் சொல்லியிருக்கிறது நிர்வாகம்.

அதன்படி இன்று காலை பள்ளிக்குச் சென்ற அவர்களிடம், `நாங்கள் பள்ளிக் கட்டடத்தை இடிக்க முடிவு செய்துள்ளோம். எனவே உங்களது பிள்ளைகளை வேறு பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்” எனக் கூறினார்களாம்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், `முழு ஆண்டு பரிட்சை எழுத இருக்கிற இந்த நேரத்தில் என்ன இப்படிச் சொல்கிறீர்கள்’ எனக் கேட்டிருக்கிறார்கள்.

குமார ராணி மீனா முத்தையா பள்ளி

குமார ராணி மீனா முத்தையா பள்ளி

ஆனால் நிர்வாகம் முதலில் சொன்ன அதையே திரும்பவும் சொல்லிவிட்டு நிர்வாகத்தின் முடிவு எனச் சொல்லி விட்டார்ர்களாம்.

வேறு வழியில்லாமல் பெற்றோர்கள் தற்போது பள்ளி வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பள்ளித் தரப்பை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது,

’நான் இங்க புதுசா சேர்ந்திருக்கிற ஆசிரியை. எனக்கு இந்த விவகாரம் முழுசா தெரியல. மேனேஜ்மென்ட் முடிவுனு சொல்றாங்க. நீங்க வைஸ் பிரின்சிபல் கிட்டப் பேசுங்க’ என இன்னொருவரிடம் போனைக் கொடுத்தார் எதிர்முனையில் பேசியவரோ, ’இது பத்தி இப்ப எதுவும் பேச முடியாதுங்க. பெற்றோர்கிட்ட நாங்க பேசிட்டிருக்கோம்’ என முடித்துக் கொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *