கொளுத்திப் போட்ட விஜய்!
“‘கண்டா வரச் சொல்லுங்க..
ராகுலைக் கையோட கூட்டி வாருங்க..”
திமுக உடன் பிறப்புகள் மற்றும் தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் இன்றைய சிக்சுவேஷன் சாங் இதுதான்.
நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் முடிய இன்னும் 10 நாட்களே இருக்கின்றன. தேசிய ஜனநாயக் கூட்டணியில் பிரதமர் மோடியுடன் சேர்ந்து மேடை ஏறி முதல்கட்ட பிரசாரத்தை முடித்து விட்டார் எடப்பாடி பழனிசாமி.
இந்தப்பக்கம் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ராகுல் இன்னும் தமிழ்நாட்டை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. பக்கத்திலிருக்கும் கேரளாவில் பிரசாரம் செய்தார். புதுச்சேரிக்கு வந்து போனார். புதுச்சேரியில் ராகுல் இருந்த அதே தினத்தில் மு.க.ஸ்டாலினும் அங்கு பிரசாரத்தில் இருந்தார்.
ஆனாலும் இருவரும் சேர்ந்து பிரசாரம் என்பதை விடுங்கள், சாதாரண சந்திப்புகூட இருவரிடையே நிகழவில்லை.
இந்தச் சூழலில்தான் திருநெல்வேலியில் பேசிய தவெக தலைவர் விஜய், ‘உண்மையான காங்கிரஸ் என் பக்கம்தான் நிற்கிறது’ என ஒரு குண்டை வீச, கொதித்துப் போய் அறிக்கை விட்டது தமிழக காங்கிரஸ்.