கனகா ரொம்ப ஸ்பெஷல்
எனக்கு ஜோடியா நடிச்ச ஹீரோயின்கள்ல கனகா ரொம்ப ஸ்பெஷல். அவங்களோட நடிச்ச ‘கரகாட்டக்காரன்’, ‘தங்கமான ராசா’ இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்.
நான் ‘மண்ணுக்கேத்த பொண்ணு’னு ஒரு படம் இயக்கினேன். அந்த படத்தை பார்த்த பாரதிராஜா சார் என்னை கூப்பிட்டு, ‘நீங்க யார்கிட்ட ஒர்க் பண்ணுனீங்க?’னு விசாரிச்சார். நான் இராமநாராயணன் சார்கிட்ட இருந்தேன்னு அவர்கிட்ட சொன்னேன். பாரதிராஜா சார் ஷாக் ஆகிட்டார். அவர்கிட்ட இருந்து வந்து என் ஸ்டைல்ல (கிராமத்து படம்) பண்ணியிருக்கீங்கனு சொல்லி பாராட்டினார்.
அவரது தயாரிப்பில் ஒரு படம் நான் இயக்கவும் எனக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டார். எனக்கு பிரமிப்பாகிடுச்சு. பாரதிராஜா சார் என்கிட்ட ‘ஹீரோயினாக யாரை நடிக்க வைக்கப் போறீங்க?’னு கேட்டார்.

நான் அவரிடம் நீங்க முத்துராமன் சார் மகன் கார்த்திக்கை அறிமுகம் செய்தது போல, நான் தேவிகாவின் மகள் கனகாவை அறிமுகம் செய்ய போறேன்’னு சொன்னேன். உடனே ஓகேன்னு சொல்லிட்டார் பாரதிராஜா. அதன்பிறகு தேவிகா வீட்டுக்கு போய், கனகாவை நடிக்கக் கேட்டோம். ஆனா, ‘கனகா இப்ப படிக்கிறா. இன்னும் கொஞ்சம் வருஷம் போகட்டும்’னு சொன்னாங்க. இந்த சம்பவத்தை கனகாகிட்ட சொன்னேன்.
உடனே கனகா ‘நல்லா ஞாபகம் இருக்குது. நீங்க எங்க வீட்டுக்கு வந்து என்னை நடிக்க கேட்ட போது, வீட்டுக்குள் இருந்து நானும் என் தோழியும் கேட்டுக்கிட்டுதான் இருந்தோம்’னு சொன்னாங்க. அதன் பிறகு கங்கை அமரன் சார் ‘கரகாட்டக்காரன்’ எடுக்கும் போது, நான் கனகாவை நடிக்க வைக்க முயற்சி பண்ணும் விஷயத்தை சொன்னேன்.
இன்னொரு ஆச்சரியமான விஷயம். பொதுவா நான் காலையில் எழுந்ததும் ஜெயா டி.வி.யில் தேன் கிண்ணம் வைப்பேன். பழைய பாடல்கள் கேட்கப் பிடிக்கும். கனகா மதியம் வர்றேன்னு சொன்னாங்க. அந்த டைம்ல டி.வி.யை ஆன் செய்தால், ‘நினைக்கத் தெரிந்த மனமே’னு தேவிகா அம்மா பாடும் பாடல் ஓடிக்கிட்டிருந்தது. இதை கனகாவிடம் சொன்னேன். அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. இப்படி பல சுவாரஸியமான நினைவுகளை பகிர்ந்துகிட்டோம். இப்ப நல்லா இருக்காங்க. இனிமையான சந்திப்பாக இருந்தது.” என்கிறார் ராமராஜன்.