பஞ்சாபை பிரித்து காலிஸ்தான் தனிநாடு உருவாக்க வேண்டும் என்பது காலிஸ்தான் பயங்கரவாதிகளின் நோக்கமாகும். இதில் பெரும்பாலானோா் கனடா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொண்டு பஞ்சாபில் பிரச்னையைத் தூண்டும் நோக்கில் செயல்படுகின்றனா். இவா்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யும் மறைமுகமாக உதவுகிறது.
கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜாா் அடையாளம் தெரியா நபா்களால் கொலை செய்யப்பட்ட பிறகு, இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறிக் கொண்டு கனடாவில் உள்ள ஹிந்து கோயில்களை காலிஸ்தான் ஆதரவாளா்கள் தாக்கி வருகின்றனா்.
பிரிட்டீஷ் கொலம்பியாவின் வான்கூவா் நகரில் உள்ள சீக்கியா்களின் வழிபாட்டு இடமான குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவாளா்கள் இரு நாள்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தினா்.