கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல்: மக்கள் அச்சம்!

Spread the love

ஆபத்தை உணராத சுற்றுலாப் பயணிகள், விரிசல் ஏற்பட்ட இடத்துக்கு அருகே நின்று செஃபி எடுத்து வருவதால், மாவட்ட நிர்வாகம் அங்கே அட்டைகளைப் போட்டு மூடி வைத்திருக்கிறது. பலரும் அப்பகுதியை அச்சத்துடன் கடந்து செல்கிறார்கள்.

கன்னியாகுமரி கடலில், விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலைக்கு இடையே சுற்றுலாப் பயணிகள் சென்று வர படகுப் போக்குவரத்து இருந்து வந்தது. ஆனால், கடல் அலையின் சீற்றம் அதிகமாகக் காணப்படும் போது படகுப் போக்குவரத்து நிறுத்தப்படும். இதனால் வெகு தொலைவிலிருந்து வரும் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

இந்த நிலையைப் போக்க, விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை இணைத்து ரூ. 37 கோடியில் 77 மீட்டா் நீளம், 10 மீட்டா் அகலத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டது.

கண்ணாடிப் பாலத்தில் நடந்து செல்வதற்காக, வழக்கமாக கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகளை விடவும் அதிக மக்கள் குமரி வரத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

வார இறுதி நாள்களில் இங்கு நுழைவுச் சீட்டு எடுக்க நீண்ட வரிசைகள் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *