கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு அரசு வீடு வழங்க வேண்டும்: அரசியல் கட்சிகள் கோரிக்கை | Political parties demand that the govt provide house to Kabaddi player Karthika

1381488
Spread the love

சென்னை: கபடி வீராங்​கனை கார்த்​தி​கா​வுக்கு வீடு வழங்க வேண்​டும் என தமிழக அரசுக்கு பாமக தலை​வர் அன்​புமணி, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லாளர் பெ.சண்​முகம், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

பஹ்ரைனில் நடை​பெற்ற ஆசிய இளை​யோர் போட்​டி​யில் தங்​கம் வென்ற இந்​திய மகளிர் கபடி அணி​யின் துணைத் தலை​வ​ரான சென்னை கண்​ணகி நகரைச் சேர்ந்த கார்த்​தி​காவை, அவரது இல்​லத்​தில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செயலாளர் பெ.சண்​முகம் நேற்று முன்​தினம் சந்​தித்து வாழ்த்து தெரி​வித்​தார்.

தொடந்து அவரிடம் கோரிக்​கைகளை​யும் கேட்டறிந்​தார். கார்த்​தி​கா​வின் பயிற்​சி​யாளர் ராஜி, கபடி வீராங்​கனை காவ்​யா, மார்க்சிஸ்ட் கம்​யூனிஸ்ட் தென்​சென்னை மாவட்​டச் செய​லா​ளர் ஆர்​.வேல்​முரு​கன் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

பின்​னர் சமூக வலை​தளத்​தில் இது தொடர்​பாக பெ.சண்​முகம் வெளி​யிட்ட பதி​வில், “தமிழக அரசு கார்த்​தி​கா​வுக்கு நல்ல சூழலில் உள்ள வீடு ஒன்றை வழங்க வேண்​டும். தொடர்ந்து பயிற்​சிகளை மேற்​கொள்ள தேவை​யான அனைத்து உதவி​களை​யும் அரசு செய்து கொடுக்க வேண்​டும். அந்த வகை​யில் கண்​ணகி நகரில் அனைத்து வசதி​களு​டன் கூடிய விளை​யாட்​டுத்திடலை உரு​வாக்​கித் தர வேண்​டும்” என்று வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

பாமக தலை​வர் அன்​புமணி வெளி​யிட்ட அறிக்​கை​யில், “இயல்​பான சூழலில் விளை​யாட்​டிலும், கல்​வி​யிலும் சாதனை படைப்பதை விட நெருக்​கடி​யான சூழல், அழுத்​தங்​களுக்கு இடை​யில் வாழ்ந்து கொண்டு சாதனை படைப்​பது மிக​வும் கடினமானது.

அந்த வகை​யில் கார்த்​திகா படைத்​திருக்​கும் சாதனை கூடு​தல் சிறப்​புமிக்​கது. கார்த்​தி​கா​வுக்கு தமிழக அரசு வழங்​கி​யுள்ள ஊக்​கத்​தொகை போது​மானதல்ல. அவருக்கு ரூ.1 கோடி ஊக்​கத்​தொகை வழங்​கு​வதுடன், அரசு வீடு வழங்க வேண்​டும் என்ற அவரது கோரிக்​கை​யை​யும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

திரு​மாவுடன் சந்​திப்பு அசோக் நகரில் உள்ள விசிகஅலு​வல​கத்​தில் அக்கட்​சி​யின் தலை​வர் திரு​மாவளவனை கார்த்​திகா நேற்று சந்​தித்து வாழ்த்து பெற்​றார். அப்​போது செய்​தி​யாளர்களிடம் திரு​மாவளவன் கூறும்போது, “நான் பிறந்த கண்​ணகி நகருக்கு புதிய பெரு​மை​யைச் சேர்த்​துள்​ளார் கார்த்​தி​கா.

கண்​ணகி நகரின் மீதான தவறான பார்வையை உடைத்​திருக்​கிறார். தமிழக அரசு அவருக்கு ரூ.25 லட்​சம் ஊக்​கத்​தொகை வழங்கி​யிருப்​பதை வரவேற்​கிறேன். எனினும் அதை ரூ.1 கோடி​யாக உயர்த்தி வழங்க வேண்​டும். அரசு வீடு ஒதுக்க வேண்​டும்” என்று தெரி​வித்​தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *