கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலசெயலாளர் பெ. சண்முகம் செய்தியாளர் சந்திப்பு | CPIM State Secretary P. Shanmugam Addresses Media in Karur

Spread the love

அத்துடன், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.

இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, அந்தப் புகாரை பாராளுமன்ற சபாநாயகரிடம் வழங்கியுள்ளனர். நீதிபதிகள் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு சாதகமாக செயல்படுவது, அவர்கள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்

நீதிபதிகள் வரம்பு மீறி பேசத் தொடங்கியுள்ளனர். இதனால் மாநில அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் இடையே மோதல் போக்கு உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நீதிபதிகளே உருவாக்குவது, தமிழகம் போன்ற அமைதியான மாநிலங்களில், கண்டனத்துக்குரியது.

எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சட்டரீதியான போராட்டங்களை நடத்தி வருகின்றன. தகுதி பெற்ற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது; அந்த வழக்கை தொடர்ந்து நடத்துவோம்.

விடுபட்ட வாக்காளர்கள் பட்டியல் கிடைத்தால், அவர்களையும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான களப்பணிகளையும் மேற்கொள்வோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *