கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் சிபிஐ விசாரணை | CBI investigate police officers in Karur incident

Spread the love

கரூர்: கரூரில் விஜய் பங்கேற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்​பவத்​தன்று பாது​காப்​புப் பணி​யில் ஈடுபட்​டிருந்த 10-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸாரிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று விசா​ரணை மேற்​கொண்​டனர்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உச்சநீதிமன்ற உதரவுப்படி, இந்த வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது.

கரூர் சுற்​றுலா மாளி​கை​யில் தங்​கி​யுள்ள சிபிஐ அதி​காரி​கள், இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு பல்​வேறு துறை அரசு அலு​வலர்​கள், சம்​பவம் நடந்த பகு​தி​யில் கடை வைத்​துள்ள வியா​பாரி​கள், நேரடி சாட்​சிகள் என 300-க்​கும் மேற்​பட்​டோருக்கு சம்​மன் அனுப்​பி​யுள்​ளனர்.

கடந்த 2-ம் தேதி 10-க்​கும் மேற்​பட்ட வியா​பாரி​களிடம் விசா​ரணை நடத்​தினர். தொடர்ந்​து, விஜய் பிரச்​சா​ரம் மேற்​கொண்ட வாக​னத்​தில் உள்ள கேமரா பதிவு காட்​சிகளை அளிக்​கு​மாறு, சென்னை பனையூரில் உள்ள தவெக அலு​வல​கத்​தில் நேற்று முன்​தினம் சம்​மன் அளித்​தனர்.

இந்​நிலை​யில், சம்​பவம் நடந்த செப். 27-ம் தேதி​யன்று பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த கரூர் நகர போலீ​ஸார் மற்​றும் பிற காவல் நிலைய போலீ​ஸார் என 10-க்​கும் மேற்​பட்​டோரிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்​று வி​சா​ரணை நடத்​தினர்​. தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடம் விசாரனை நடத்தப்படும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *