இந்த துயர சம்பவம் குறித்து நடிகர் ராஜ்கிரண் பதிவிட்டுள்ளதாவது,
”மிகப்பெரும் மன அழுத்தத்தையும், பரிதவிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. என்னதான் ஆறுதல் படுத்தப்பார்த்தாலும் மனம் தவிப்பதை, என்னால் நிறுத்த முடியவில்லை.
எனக்கே இந்த நிலையென்றால், நாற்பது உயிர்களை துள்ளத்துடிக்க சாகக்கொடுத்த, அந்தக்குடும்பங்களின் நிலைமை என்னவாகும்.
இறைவா, அந்தக்குடும்பங்களை ஆறுதல் படுத்து. இனிமேலும் இப்படியான கூட்டங்களில் போய் உயிரை விடாமல், நம் வாழ்க்கையை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற புத்தியை, எல்லா பாமர மக்களுக்கும் கொடு” எனப் பதிவிட்டுள்ளார்.