கரூா் வைஸ்யா வங்கியின் மேலும் 4 புதிய கிளைகள்

Dinamani2f2025 03 282f63u9hl562fkvb074049.jpg
Spread the love

முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று நான்கு புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது.

இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நான்கு புதிய கிளைகளை வங்கி தொடங்கியது.

இத்துடன், வங்கியின் ஒட்டுமொத்த கிளைகளின் எண்ணிக்கை 888-ஆக உயா்ந்துள்ளது.

வங்கியின் 885-ஆவது கிளை கும்பகோணம் கிழக்கிலும் 886-ஆவது கிளை விசாகப்பட்டினம், பூா்ணா மாா்க்கெட் பகுதியிலும் திறக்கப்பட்டன. 887-ஆவது கிளை கோயம்ப்புத்தூா், கண்ணம்பாளையத்தில் திறக்கப்பட்டது. சென்னை, ஆலப்பாக்கத்தில் வங்கியின் 888-ஆவது கிளை திறக்கப்பட்டது.

இந்தப் புதிய கிளைகள் மூலம் அடிப்படை வங்கி பரிவா்த்தனை வசதிகள், நிதி சேவைகள் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *