இந்த நிலையில் சென்னையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தி.மு.க-வுடன் சேர்ந்தது பற்றி கமல் மீண்டும் விளக்கியிருக்கிறார்.
நிகழ்ச்சியில் பேசிய கமல், “இது அரசியல் இக்கட்டுக்காகவோ சூழலுக்காகவோ நான் சேர்ந்த இடமல்ல. நான் சேரவேண்டிய இடம்தான் இது. எங்கள் கொள்கைகள் எல்லாம் ஒரேமாதிரியானது.
நாங்கள் இதை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்று போர்க்குரல் கொடுப்பது இவர்களோடு அல்ல.
இதனை நடத்த வேண்டும் என்று போட்டியாகத் தேர்தலில் போட்டியிட்டபோது நாங்கள் சொன்ன ஐடியாவாக இருந்தாலும் அதை எடுத்துக்கொண்டு செயல்படுத்திக் காட்டியவர்கள் இவர்கள். இவர்களோடு சேர்வதா இல்லை யாரென்றே தெரியாதவர்களுடன் சேர்வதா…

கலைஞருக்கு ஓய்வு கொடுத்தது சரிதான். எங்களுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அந்த ஓய்வுகூட கொடுக்கலனா 90 வயதுக்கு மேல அவர் வாழ்ந்திருக்க மாட்டார். அந்த ஓய்வுக்கு நன்றி.
அதேபோல் அவருடைய பேரனும் நீண்ட நாள் வாழ்ந்து இந்த அமைப்புக்கு நன்மை சேர்க்க வேண்டும். தி.மு.க என்பது ஒரு உணர்வு.
என் வயது என்னவோ அதுதான் தி.மு.க-வைப் பற்றிய என் புரிதல். நான் கண்திறந்தபோது பார்த்த சூரியன் இதான். இருட்டு வரும், நாளை சூரியன் வரும்.
இருட்டைப் பார்த்து நான் பயப்பட மாட்டேன். ஏனென்றால் விடியும், உதயம் வரும். உதயநிதியும் வருவாரு, முதலமைச்சரும்… இன்னொரு பாராட்டு விழாவுக்கு இந்த அரங்கம் பத்தாது” என்று சிரித்தவாறே கூறினார்.