கலையாத கனவுலகம்: டூரிங் டாக்கீஸ் முதல் மல்டிபிளக்ஸ் வரை! | My Vikatan author shares about cinema

Spread the love

சினிமா..

பலருக்கு அலர்ஜி

சிலருக்கு எதிரி

இன்னும் சில பேருக்கு அதன் அர்த்தமே தெரியறதில்ல …

மொத்தத்தில் சினிமா பார்த்தாலே (அதுவும் தியேட்டர்ல) தெய்வ குத்தமாயிடும்ன்னு நினைக்கிறவங்க தான் இங்கு நிறைய பேர்.

சினிமாவை நீங்கள் எப்படி? எதில் ?பார்க்கிறீர்கள் என்பது முக்கியம்.

சினிமாவை திரையரங்கில் பார்ப்பது பிடிக்கும்ன்னா அதுவே உங்களை மன அழுத்தத்திலிருந்து விடுவிக்கும்.

அதை ஒரு அலுப்புடனோ, சலிப்புடனோ, பார்த்தால் மன அழுத்தமாகவே மாறும்.

பிடித்து செய்தால் எந்தக் காரியமும் நம் மன அழுத்தத்தைப் போக்கக்கூடியதே!

பொழுதுபோக்கின் தவிர்க்க முடியாத அங்கம் சினிமா. காலம் கடந்தாலும் நம்மோடு தொடர்ந்து வரும் கலையாத கனவுலகம் .

அது .கடந்து வந்த பாதையை காலத்தின் கண்ணாடியாய் நின்று சொல்லிக் கொண்டிருந்தது தான் டூரிங் டாக்கீஸ்.

பெரிய கீற்றுக் கொட்டகை நல்ல ஆற்று மணல் பரப்பிய தரையில் படம் பார்க்கும் சுகமே தனி ( வசதியானவர்களுக்கு பெஞ்ச்)

டூரிங் டாக்கீஸ் கீற்று கொட்டகை டென்த் கொட்டகை அவ்வளவு ஏன் செல்லப் பெயரிட்டு அழைத்த எத்தனையோ திரையரங்குகள் இன்றைக்கு அழிந்து போனாலும் அவற்றில் படம் பார்த்த நினைவுகள் அழியவில்லை.

என்னதான் வீட்டுக்குள்ளேயே ஓடிடி டியில் திரைப்படங்கள் வந்தாலும் திரையரங்குக்குச் சென்று மக்களோடு மக்களாக விசில் அடித்து, கைத்தட்டி நகைச்சுவை காட்சிகளுக்கு மனம் விட்டு சிரித்து ,வில்லன் வந்தா திட்டி பச்சை சிவப்பு நிற நோட்டீசுகளை திரையில் பறக்கவிட்டு .. படம் பார்ப்பது என்பது வேற லெவல் ஃபீல்.

வீட்டில் எவ்வளவோ வேலைகள் செய்தாலும் தியேட்டருக்கு சென்றுஒரு சினிமா பார்த்தால் புதுவிதமான எனர்ஜி வந்துவிடும் . வேலை, கடமை இத்தியாதி களுக்கு மத்தியில் புத்தகம் படிப்பது போல், இசை கேட்பது போல்தான் அதுவும் அது ஒரு விதமான தியான நிலை ,

நமக்கான மகிழ்ச்சியை ரொம்ப பெரிய விஷயத்துக்கு பின்னாடி எல்லாம் வச்சிக்க கூடாது நமக்கு ரொம்ப பிடிச்ச சினிமாவை தியேட்டர்ல பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டாடுற அளவுக்கு எளிமையா வச்சுக்கணும் .

அப்பதானா வாழ்க்கை இனிக்கும்..

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *