தமிழக பா.ஜ.க-வில், அணிப் பிரிவுகளுக்கு மாநில அமைப்பாளராக இருக்கும் கே.டி.ராகவனுக்கு, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவி வரப்போகிறதாம். ‘கும்பகோணத்தில், 30 அணிப் பிரிவு நிர்வாகிகளின் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி முடித்த வகையில், ராகவன் குறித்து பாசிட்டிவ் ரிப்போர்ட்டை டெல்லிக்குக் கொடுத்திருக்கிறாராம் தேசிய அமைப்புப் பொதுச்செயலாளரான பி.எல்.சந்தோஷ்.

ஜே.பி.நட்டாவுக்கு மாற்றாக, தேசியத் தலைவர் பதவிக்குப் புதிதாக ஒருவர் நியமிக்கப்பட்ட பிறகு, தேசிய அளவில் பல்வேறு பொறுப்புகளுக்கும் புதியவர்கள் நியமிக்கப்படவிருக்கின்றனர். அந்த வகையில், ராகவனுக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்படவிருக்கிறது’ என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ராகவனுக்காகச் சிபாரிசு செய்வதால், விரைவிலேயே பலன் கிடைக்கும் என்று ஆரூடம் சொல்கிறார்கள் கமலாலய சீனியர்கள்!