“காங்கிரஸ்தான் என் உயிர். மரியாதை, அன்புதான் கேட்கிறோம்!” – மாணிக்கம் தாகூர் |”Congress is my life. We ask for respect and love!” – Manickam Tagore

Spread the love

அவர் பேசுகையில், “உண்மையாக பாஜகவை எதிர்க்கக்கூடிய தைரியமும் தில்லும் காங்கிரஸாருக்கு மட்டும்தான் இருக்கின்றன.

மோடி அரசு ராகுல் காந்தியைப் பேசவிடாமல் தடுத்த விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆனது 8 பேர். அதில் 7 பேர் காங்கிரஸ். ஒரு ஆள் சிபிஎம். பாராளுமன்றத்தில் யார் பலமாகச் சண்டையிடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

துணை நிற்கிறோம்.. துணை நிற்கிறோம் என்றவர்கள் ஏன் சஸ்பெண்ட் ஆகாமல் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சைடு வாங்கிக்கொண்டுப் போய் வணக்கம் சொல்லக்கூடிய பழக்கம் காங்கிரஸ்காரனுக்குக் கிடையவே கிடையாது.

மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ்தான் என் உயிர். மரியாதை, அன்புதான் கேட்கிறோம்.

காங்கிரஸைச் சாதாரணமாக நினைத்துப் பேசுகின்றனர். மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம். எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள்.

நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதை கொடுக்க வேண்டும் என்பதுதான்” எனக் கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *