காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை!

Dinamani2f2025 02 052fhjhduliv2fkkhouse.jpg
Spread the love

இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அளிக்கப்பட்ட புகார் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புதன்கிழமை காலை ஆய்வாளர் கீதா தலைமையிலான குழுவினர் மாநகராட்சி ஊழியர் கண்ணனுக்கு சொந்தமான வீடான காமாட்சி அம்மன் அவென்யூ இல்லத்தில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் ஐந்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும் வீட்டில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குதல் என பல்வேறு பணிகளுக்கு அதிக அளவில் பணம் பெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், 51 வார்டுகளை கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில் நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் பிட்டர் கண்ணன் வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *