விண்ணப்பம் பரிசீலனைக்கு வந்தபோது அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் திருமணம் செய்து கொண்ட இருவரும் எப்படி மொழியை புரிந்து கொள்ளமுடியாமல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டனர் என்று கேள்வி எழுப்பினர். அதோடு இத்திருமணத்தில் சந்தேகம் எழுப்பினர். மொழி அவரது குடியுரிமை கோரிக்கைக்கு தடையாக வந்து நின்றது. இறுதியில் அம்மூதாட்டியின் மனுவை அதிகாரிகள் தள்ளுபடி செய்துவிட்டனர்.
இப்போது அப்பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் அமெரிக்காவில் இருந்து வெளியேற அமெரிக்க அரசு 90 நாட்கள் கெடு விதித்து இருக்கிறது. அமெரிக்காவில் குடியுரிமை பெற திருமணம் ஒரு வழியாகும். அதனை பயன்படுத்தி சிலர் போலி திருமணம் செய்து குடியுரிமை பெறுகின்றனர். இது போன்ற போலி திருமணத்தால் உண்மையிலேயே திருமணம் செய்து குடியுரிமை பெற நினைப்பவர்கள் கூட கடுமையான சவால்களை சந்திக்கின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்த ஹர்ஜித் கவுர் என்ற பெண்ணை அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து இந்தியாவிற்கு நாடு கடத்தினர். அப்பெண் அமெரிக்காவில் அகதி அந்தஸ்து கேட்டு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு அகதி அந்தஸ்து கொடுக்காமல் அவர் அமெரிக்காவில் தங்கிக்கொள்ள தொடர்ந்து அவரது விசா நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. கடைசியாக விசா நீட்டிப்புக்கு விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று பஞ்சாப்பிற்கு நாடு கடத்திவிட்டனர்.