காணாமல் போன தில்லி பல்கலை. மாணவி சடலமாக மீட்பு! Delhi University

Spread the love

இதையடுத்து, காவல்துறை நடத்திய விசாரணையில், சினேகாவை கடைசியாக சிக்னேச்சர் பாலம் அருகே இறக்கிவிட்டதாக வாடகை கார் ஓட்டுநர் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வசதியுடன் ஆராய்ந்ததில், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. அதேபோல், பாலத்தில் ஒரு பெண் நின்று கொண்டிருந்ததாகவும், பின்னா் அந்த இடத்திலிருந்து காணாமல் போனதாகவும் நேரில் பாா்த்த சிலா் தெரிவித்தனா்.

நிகம் போத் காட் முதல் நொய்டா வரையிலான பகுதிகளை தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்) மற்றும் உள்ளூா் காவல்துறை உதவியுடன் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், கீதா காலனி மேம்பாலம் அருகே சினேகாவின் சடலத்தை மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்டனர். மாணவியின் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *