கொலை செய்யப்பட்ட ஃபர்சானாவின் சகோதரர் பேசுகையில், அவரது குடும்பத்தினர் அஃபானுக்கு ஃபர்சானாவை திருமணம் செய்துவைக்க சம்மதம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.
ஆனால், அஃபானின் வீட்டில் இரு நாள்களுக்கு முன் ஃபர்சானவை அவர் அழைத்துச் சென்றபோது குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
முதற்கட்டமாக, நிதி பிரச்னைதான் இந்தக் கொலைகளுக்குக் காரணமா என சந்தேகிக்கும் காவல்துறையினர் அஃபான் போதைக்கு அடிமையானதால் கொலை செய்தாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அஃபானிடம் விசாரணைக் குழு இன்று வாக்குமூலம் பெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.