
இந்நிலையில் மீதமுள்ள இந்த பில் தொகை வழங்குவதற்கு காரியாபட்டி பேரூராட்சியில் பணிபுரியும் பொறியாளர் கணேசன் என்பவர் ரூ.3,50,000 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த லஞ்சப் பணத்தில் ரூ. 50,000 முன்பணமாக வழங்க வேண்டும் எனவும் பொறியாளர் கணேசன் கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்தக்காரர் பழனி குமார், விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறையை நாடி உள்ளார்.