காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது | A low pressure area has formed: India Meteorological Department

Spread the love

காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும்.

இது அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு கடலோர ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசாவை நோக்கி நகர வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, ஆகஸ்ட் 15 வரை மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 16 வரை தெற்கு வங்க மாவட்டங்களில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை மற்றும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஆந்திரம், தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *