கால்பந்து உலகக் கோப்பைக்காக 30 லட்சம் தெருநாய்களை கொல்ல மொராக்கோ திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலால் விலங்கு ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
2030ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் மொராக்கோ, போர்ச்சுகள் உள்பட 6 நாடுகளில் நடைபெறுமென ஃபிபா அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரான டாக்டர். ஜேன் காடெல் மொராக்காவின் 30 லட்சம் நாய்களை கொல்லும் கொடுஞ்செயல் திட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஃபிபாவுக்கு அவர் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஃபிபா உடனடியாக தலையிட இதை நிறுத்த வேண்டுமெனவும் கூறியுள்ளார்.