அப்போது, மாநாடு நடைபெறும் 25- ஆம் தேதியை தொடர்ந்து 27- ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வர இருப்பதாகவும், இதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியிருப்பதால், மாநாடு நடைபெறும் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், விநாயகர் சதுர்த்தி வருகிற 27- ஆம் தேதி வருவதால், பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்கள் இருக்கும் எனக் கூறி காவல் துறை சாா்பில் த.வெ.க. மாநாடு தேதியை மாற்றுவதற்கு யோசனை தெரிவித்தனர்.
இதன்படி, வருகிற 18- ஆம் தேதி முதல் 22- ஆம் தேதி வரை ஒரு தேதியை நீங்கள் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
காவல் துறை கூறிய தேதிகளில் ஒன்றான ஆக. 21 ஆம் தேதியை தேர்வு செய்து மாநாடு நடந்த காவல் துறையினரிடம் தவெக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,, மதுரையில் நடைபெறவிருக்கும் த.வெ.க. மாநாட்டுக்கான புதிய தேதி குறித்த அறிவிப்பை விஜய் இன்று(ஆக. 5), அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.