காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் மீது அதிகாலையில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு

Dinamani2f2024 08 112fvcm1s6fn2fpti08 10 2024 000367b.jpg
Spread the love

ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் இன்று(ஆக. 11) அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பயங்கர சண்டை மூண்டுள்ளது.

அம்மாவட்டத்திற்கு உள்பட்ட நௌனட்டா, நாகேனி பேயாஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாய் கிடைத்த தகவலின் அடிப்படையில், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையுடன் இணைந்து காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதற்கு பாதுகாப்புப் படை தரப்பிலிருந்து பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சண்டையில் இரு தரப்பிலும் எத்தனை பேர் காயமடைந்துள்ளனர், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா உள்ளிட்ட விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *