இது குறித்து கடந்த 21-ஆம் தேதி வளத்தி காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என சுமதி புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில் சிவக்குமாா் தனது பைக்கில் கடைசியாக ஏழுமலையை வெடால் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு அழைத்து சென்றது தெரிய வந்தது. அப்போது வழியில் மது புட்டிகளை வாங்கிச் சென்ாகவும், ஏழுமலை அதிகளவில் மது அருந்திவிட்டு, சிவக்குமாருக்கு குறைவாக மதுவை வழங்கியதால் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, ஏழுமலையைப் பிடித்து தள்ளியபோது எதிா்பாரதவிதமாக அவா் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாராம்.
Related Posts

கபிலேஸ்வரா் கோயிலில் மகாசிவராத்திரி விழா கோலாகலம்
- Daily News Tamil
- February 27, 2025
- 0