கிராம நன்மைக்காக… கைம்பெண்களுக்கு பாத பூஜை செய்த வழிபட்ட சுமங்கலி பெண்கள்

Dinamani2f2024 082f48c72443 0c19 4bb0 9179 A4660bab418a2fvazhapadi.jpg
Spread the love

வாழப்பாடி: சேலம் மாவட்டம்,வாழப்பாடி அருகே கிராமம் மற்றும் குடும்ப நன்மைக்காகவும், வறட்சி நீங்கி, மழை பொழிந்து மக்கள் நல்வாழ்வு பெற வேண்டி, வயதில் மூத்த கைம்பெண்களுக்கு சுமங்கலி பெண்கள் பாத பூஜை செய்து, அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபடும் வினோத நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

வாழப்பாடி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கிராம மக்களின் நன்மைக்காகவும்,வறட்சி நீங்கி செல்வ செழிப்பு, மழை பொழிந்து மக்கள் நல்வாழ்வு பெற வேண்டி, இந்த பகுதி மக்களின் காவல் தெய்வமான மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தும், சிறுதானிய கூழ் ஊற்றி வழிபடுவதையும், வயதில் மூத்த கைம்பெண்களை அம்மன் சன்னதியில் வரிசையாக நிற்க வைத்து, சுமங்கலி பெண்களும், சிறுவர்- சிறுமியரும் பாத பூஜை செய்து, தாம்பூலம் கொடுத்து வினோத பூஜை நடத்துவதை வழக்கமாக தொடர்ந்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *