கிரிக்கெட்டில் ஜடேஜா பங்களிப்புக்கு மோடி பாராட்டு

Modi
Spread the love

டி20 உலக்கோப்பை இறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தை பெற்றது. இது இந்தியர்கள் ஒவ்வொருவரின் கனவாக இருந்தது.

Grrx9j2wiaavd6b

வீராட்கோலி, ரோகித்சர்மா ஒய்வு

டெஸ்ட், 50 ஓவர் உலககோப்பையை இறுதிபோட்டியில் தவற விட்ட ரோகித் சர்மாவுக்கு இந்த வெற்றி பெரிய அளவில் ஆறுதல் அளித்தது. அவரது உணர்ச்சி பூர்வமான வெளிப்பாடு மற்றும் பேட்டிகள் இதனை வெளிப்படுத்தியது.
ஏற்கனவே நேற்று டி20 போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக வீராட்கோலி, ரோகித்சர்மா ஆகியோர் அறிவித்து இருந்தனர்.

ரவீந்திர ஜடேஜாவும்

இந்த நிலையில் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று(30&ந்தேதி) அறிவித்துள்ளார். ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட்டின் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பிரதமர்நரேந்திர மோடி அவரைப் பாராட்டியுள்ளார்.

Jadeja

மோடி பாராட்டு

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடிவெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
“அன்புள்ள ரவீந்திர ஜடேஜா,
ஆல்ரவுண்டராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். உங்களது ஸ்டைலான ஸ்ட்ரோக் பிளே, ஸ்பின் மற்றும் அபாரமான ஃபீல்டிங் ஆகியவற்றை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். பல ஆண்டுகளாக டி 20 கிரிக்கெட்டில் உற்சாகமாக சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியதற்கு நன்றி. உங்களது அடுத்த முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்.”
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

 

டாங்கியில் ஆற்றை கடந்த 5 ராணுவ வீரர்கள் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *