கிருஷ்ணகிரி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை

Dinamani2f2024 09 212fsrxaztsa2fkrishnakiriatm.jpg
Spread the love

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே வங்கி ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி – குப்பம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தின் இயந்திரத்தில் ரூ.12 லட்சத்தை வெள்ளிக்கிழமை வங்கியாளர்கள் வைத்துள்ளனர்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட மக்கள், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *