குஜராத் மீனவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு தமிழக மீனவருக்கு ஏன் இல்லை? என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சாதி வாரி கணக்கெடுப்பு போராட்டம் நடத்திய பின் அந்தப் போராட்டத்தை யாருமே மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. ஆனால் என்னை அவமானப்படுத்துகிற செய்திகளை மட்டும் உடனுக்குடன் ஒளிபரப்புகிறீர்கள். யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.
வீட்டை விட்டு வெளியே வந்தால் அச்சத்துடனே வெளிவரக்கூடிய ஒரு சூழல் உருவாகி உள்ளது. தன்னிடம் தவறாக நடந்து கொண்டான் என்று புகார் அளித்த பெண்ணின் வாக்குமூலத்தை வெளியிட்ட காவல்துறை, ஞானசேகரன் வாக்குமூலத்தை ஏன் வெளியிடவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.