ஜெயராம் மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல மொழிப்படங்களில் வலம் வருபவர்.
மலையாளத்தில் 1986-ல் “அபரன்” என்ற படத்துடன் ஆரம்பித்த அவரது திரைப்பயணம். தமிழ் திரையுலகிற்கு 1992-ஆம் ஆண்டு “கோகுலம்’ படம் மூலம் பிரபலமானார்.
தமிழில் ‘தெனாலி’, ‘துப்பாக்கி’, ‘உத்தம வில்லன்’, ‘பஞ்சதந்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
மலையாளம், தெலுங்குத் திரையுலகில் பிஸியாக இருக்கும் இவர், இன்று கும்பகோணத்திற்கு வந்து, அங்கிருக்கும் கோவில்களில் தரிசனம் செய்து தனது அம்மாவின் சொந்தங்களை நலம் விசாரித்தார். மேலும் மனைவியுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.