இதை தொடர்ந்து மாணவனை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். வலுகட்டாயமாக தாலி கட்டுவதற்கு செய்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க-வினர் (ராமதாஸ் அணி) ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக அறிவித்ததுடன், கும்பகோணம் பகுதியில் போஸ்டரும் ஒட்டினர். இந்நிலையில் வருகிற 27ம் தேதிக்குள் மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் 28ம் தேதி அன்று ஆடுதுறையில் கடையடைப்பு செய்து, ஊர்வலம் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பா.ம.க. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தங்களை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் கருத்து மற்றும் பதிவுகளை பா.ம.க. தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் ம.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலகிருஷ்ணனின் அம்மா கும்பகோணம் மேற்கு போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் போலீஸார் ம.க.ஸ்டாலின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.