குரங்கு தள்ளிவிட்டதால் மாடியில் இருந்து விழுந்த மாணவி பலி!

Dinamani2f2025 01 262f6iwqxf8u2fcapture.jpg
Spread the love

அவர்களைப் பார்த்து சில குரங்குகள் திசை திரும்பியதால் மாணவி மாடிப்படிகள் இருக்கும் பகுதிக்கு தப்பியோடினார்.

ஆனால், ஒரு குரங்கு மாணவியின் மீது ஏறி அவரை மாடியில் இருந்து கீழே தள்ளியது. இதனால், படுகாயமடைந்த மாணவிக்கு தலையின் பின்பகுதியில் பலத்த அடிபட்டது. அவர் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் பிரியா ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.

மாணவியின் பிரேத பரிசோதனைக்கு குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என்றும் அவர்கள் புகாரளிக்கவும் முன்வரவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குரங்குகள் தொல்லை குறித்து தொடர்ந்து புகாரளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *