நெல்லை மாநகரில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் ஏ பிளஸ், ஏ மற்றும் பி கிரேடு ரெளடிகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் ரெளடிகளின் நகர்வு, அவர்களின் நடவடிக்கை குறித்தும் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த பிரபல ரெளடி கனகராஜ் தென்காசி மாவட்டம், குற்றாலத்திலுள்ள ஒரு தனியார் விடுதியில் தனது கூட்டாளிகள் கார்த்திக், சாபின், பிரகாஷ் ஆகிய 3 பேருடன் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் சென்னை ரெளடிகள் ஒழிப்பு தனிப்பிரிவு போலீஸார் தலைமையில் குழுவாக குற்றாலத்திற்கு விரைந்தனர். உள்ளூர் போலீஸார் உதவியுடன் குற்றாலத்தைச் சுற்றியுள்ள விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தமிழ்நாடு ஓட்டல் அருகில் ஒரு வீட்டில் செயல்பட்டு வரும் விடுதியில் கனகராஜ் உள்ளிட்ட நால்வர் தங்கியிருப்பது தெரிய வந்தது.