கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர்.
கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த செல்வராஜ் தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூர் மாவட்டம். ஒரத்தநாடு கீழையூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட காரில் சென்றுகொண்டிருந்தனர்.
கார் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து காரின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.