குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவின் மூலம் 964 குழந்தைகள் மீட்பு!

dinamani2F2025 05 252Fz8grhfo52Fpolice child trafficking TNIE edi
Spread the love

குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவின் மூலம் இதுவரை 964 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக குழந்தைகளின் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சமீபத்தில் பிகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் இயங்கிவந்த இசைக் குழுவில் இருந்து 17 சிறுமிகள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை 964 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிகாரில் செயல்பட்டுவரும் உள்ளூர் இசைக்குழுவில், 18 வயது நிரம்பாத சிறுமிகள் ஆபாச நடனமாட கட்டாயப்படுத்தப்படுவதாக, தொண்டு நிறுவனம் ஒன்றிடமிருந்து வந்தத் தகவலைத் தொடர்ந்து இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பிகாரின் மார்சாக் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவியுடன் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *