குவைத்-சென்னை விமானத்தில் புகைப்பிடித்த பயணி கைது

dinamani2Fimport2F20212F52F262Foriginal2FBoeing AP
Spread the love

குவைத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்த பயணியை சென்னை விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

குவைத்திலிருந்து 144 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை நோக்கி இண்டிகோ விமானம் வந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சோ்ந்த ஷேக் முகமது (28) என்ற பயணி அவ்வப்போது எழுந்து கழிப்பறைக்குச் சென்று புகைப்பிடித்துள்ளாா்.

இதைப் பாா்த்த விமானப் பணிப்பெண்கள் மற்றும் பிற பயணிகள் ஷேக் முகமதுவை கண்டித்துள்ளனா். ஆனால், அதை ஏற்காமல் அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்துள்ளாா்.

இதையடுத்து உடனடியாக சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அங்கு தயாராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்துக்குள் ஏறி, ஷேக் முகமதுவை விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.

விசாரணைக்குப் பின்னா், அவா் விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ஷேக் முகமதுவை கைது செய்தனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *