சில நாட்களுக்கு முன்னர் ஹரியானாவின் பகதூர்கர் மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. பதினைந்து வயது அமன் ஒரு மைதானத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது ஒரு கூடைப்பந்து கம்பம் அவர் மீது விழுந்தது.
உள்காயங்களால் அவதியுற்ற அமன் ரோஹ்தக்கின் பண்டிட் பகவத் தயாள் சர்மா முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஹரியானாவில் அடுத்தடுத்து இளம் விளையாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவத்தால், விளையாட்டு மையங்களின் உட்கட்டமைப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.