தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க நேற்று (மார்ச். 19) டெல்லி சென்றிருந்தார்.

இவரைத் தொடர்ந்து இன்று அமமுக தலைவர் டிடிவி தினகரனும், பாமக தலைவர் அன்புமணியும் இன்று (மார்ச்.20) அமித்ஷாவைச் சந்திக்க டெல்லி சென்றிருக்கின்றனர்.
இந்நிலையில் அமித்ஷாவைச் சந்தித்தப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட நிறைவு பெற்றுவிட்டன.