கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தேவை: பிரதமர் மோடி

Dinamani2f2024 072fdc800a39 Da1b 4c8c Ad70 048d48da78672fmodi.jpg
Spread the love

கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் அவர் அளித்த பேட்டியில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆக்கப்பூர்வமான கூட்டத்தொடர் நடைபெற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மக்களின் நலன்களை கருத்தில்கொண்டு அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும். நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். வளர்ச்சிக்கான பாதையில் மத்திய அரசு தொடர்ந்து நடைபோடும் என்றார். கடந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வழக்கமாக ஜூலை இறுதியில் தொடங்கி நடைபெறும். நடப்பாண்டு மக்களவைத் தோ்தல் நடைபெற்றதால், மழைக்கால கூட்டத் தொடா் பட்ஜெட் கூட்டத் தொடராக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், நடப்பு ஆண்டின் 2-ஆவது பட்ஜெட் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 22) தொடங்கி 19 அமா்வுகளுடன் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *