கேரம் உலகக் கோப்பை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா | World Carrom Cup: Keerthana from Chennai Clinches Gold Medal

Spread the love

மாலத்தீவில் 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றனர்.

இந்திய மகளிர் அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆசிக் ஆகிய 5 பேர் இடம் பெற்றனர்.

இதில் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா மகளிர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் மகளிர் குழுப் போட்டி ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் உலக கேரம் சாம்பியன்ஸ் பட்டத்தையும் பெற்றார்.

கேரம் போர்டு

கேரம் போர்டு

மகளிர் ஒற்றையர் பிரிவில் கீர்த்தனா, இந்தியாவின் மற்றொரு வீரங்கனையான காஜல் குமாரியை வீழ்த்தி தங்கம் வென்றார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் கீர்த்தனா – காஜல் குமாரி ஜோடி, மற்றொரு இந்திய ஜோடியான மித்ரா – காசிமாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இதேபோல கீர்த்தனா உட்பட 4 பேர் கொண்ட மகளிர் குழுப் போட்டியில் இந்திய அணி மாலத்தீவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இதன்மூலம் இந்த உலகக்கோப்பையில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா 3 தங்கப் பதக்கங்களும், காசிமா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கங்களும், மித்ரா ஒரு தங்கம், ஒரு வெள்ளி என இரண்டு பதக்கங்களும், அப்துல் ஆசிக் ஒரு தங்கப் பதக்கமும் வென்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *