கேரளத்தில் தென்னை மரம் விழுந்ததில் 2 பெண் தொழிலாளர்கள் பலி

dinamani2F2024 10 242F2u0a1rqc2Fgdr24ele 2410chn 144 3
Spread the love

கேரளத்தில் தென்னை மரம் வேரோடு பெயர்ந்து விழுந்ததில் 2 பெண் தொழிலாளர்கள் பலியாகினர்.

கேரள மாநிலம், நெய்யாட்டின்கராவில் உள்ள குன்னத்துகலில் தென்னை மரம் வேரோடு பெயர்ந்து இரண்டு பெண் தொழிலாளர்கள் மீது சனிக்கிழமை விழுந்தது.

இந்த சம்பவத்தில் அவர்கள் இருவரும் பலியானதாக போலீஸார் தெரிவித்தனர்.

பலியானவர்கள் வசந்தா (65) மற்றும் சந்திரிகா (64) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தினசரி கூலி வேலை செய்பவர்கள்.

கிராமத்தில் வேலை நேரத்தில் மதிய உணவுக்குப் பிறகு பெண்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

அமெரிக்கா செல்வதற்கான விமான கட்டணம் அதிரடியாக உயர்வு?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *