கேரளத்தில் மூளையை உண்ணும் அமீபா தொற்றால் சிறுவன் பலி!

Dinamani2f2024 072fb9009b76 6f41 43a9 A0c2 F400bc133b422fnewindianexpress 2024 06 4355e1e0 3176 4a17 B358 Dfb618079b4c 202405153161925.avif.avif
Spread the love

கேரளத்தில் அசுத்தமான நீரில் காணப்படும் அமீபாவால் ஏற்படும் அரிய மூளைத் தொற்றான அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸுக்கு சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன், தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தான்.

14 வயதான மிருதுல் புதன்கிழமை இரவு 11.20 மணியளவில் இறந்ததாக கேரள மாநில சுகாதாரத் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

கேரளத்தில் மே மாதத்திற்குப் பிறகு இவ்வகையான நோய்த்தொற்று மூலம் பலியாவது இது மூன்றாவது நிகழ்வாகும்.

மலப்புரத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி மே 21 அன்று புதியவகை அமீபா தொற்றால் பலியானார். இரண்டாவதாக கண்ணூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஜூன் 25 ஆம் தேதி இறந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *