பல நூற்றாண்டுகளாகக் குறைந்த மழையிலும், கடுமையான சூழலிலும் வாழ்ந்த மக்கள், தாவரங்கள், விலங்குகள் அனைத்தும் இப்போது அபாயத்தில் உள்ளன. ஏனெனில் பாலைவனத்தின் தன்மையே மாறிக்கொண்டிருக்கிறது என ஐஐடி பேராசிரியர்கள் எழுதிய அந்த ஆய்வுக் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.
இந்தியாவின் தார் பாலைவனம் ராஜஸ்தானின் 13 மாவட்டங்கள், வடமேற்கு குஜராத், பஞ்சாப், ஹரியானாவின் சில பகுதிகள், பாகிஸ்தானின் தென்கிழக்கு பகுதிகள் என பரந்து விரிந்து கிடக்கிறது. தார் பாலைவனத்தின் அம்சங்களாக மணல் குன்றுகள், பாறைப் பாதைகள், பருவகால புல்வெளிகள், உப்பு சமவெளிகள் ஆகியவையே பிரதானமாகும்.

ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் தார் பாலைவனம் 38 சதவிகிதம் பாலைவனப் பசுமையாக்கத் திட்டத்தில் முற்றிலுமாக மாறியிருக்கிறது. அதன் காரணமாக 2001 – 2023 க்கு இடையில் 64% மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. பாலைவனப் பகுதியில் நிலத்தடி நீர் உயர்வதும், கூடுதல் மழைப்பொழிவும் பாலைவனப் பசுமையாக்கத் திட்டத்தில் முன்னிலை வகிக்கின்றன.