கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் புன்னப்புரா தெற்கு ஊராட்சி 5-வது வார்டைச் சேர்ந்தவர் உஷா ஜோசப் (59). அவரது கர்ப்பப் பையில் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பை கட்டி அகற்றப்பட்டது.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு உஷா ஜோசப்புக்கு வயிற்றில் வலி ஏற்பட்டது. மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று மருந்து வாங்கினார். ஆனாலும், வலி தீரவில்லை. வலிக்காக மருந்து எடுத்தபடியே நாள்களைக் கடத்தினார்.
சில நாள்களுக்கு முன்பு வேறு ஒரு மருத்துவரைச் சந்தித்து தனது பிரச்னையைக் கூறினார். அவர் எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டார். எக்ஸ்ரேவில் அவரது வயிற்றில் கத்தரிக்கோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்று அறுவை சிகிச்சை மூலம் கத்தரிக்கோலை அகற்றும்படி அந்த மருத்துவர் கூறி உஷா ஜோசப்பை அனுப்பி வைத்தார்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்று விவரம் தெரிவித்தார். உடனடியாக மருத்துவமனையில் அட்மிட்டானால் மறுநாளே அறுவை சிகிச்சை மூலம் கத்தரிக்கோலை அகற்றிவிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த உஷா ஜோசப் உறவினர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தார். அவரது உறவினரான தொபியாஸ் புன்னப்புரா தெற்கு ஊராட்சி துணை த்தலைவராக உள்ளார். அவரது வழிகாட்டுதல்படி புன்னப்புரா காவல் நிலையத்தில் உஷா ஜோசப் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து உஷா ஜோசப் கூறுகையில், “ஆபரேஷனுக்குப்பின் வயிற்று வலி என நான் மருத்துவமனைக்குச் செல்லும்போது சிறுநீரகத்தில் கிருமித் தொற்று இருப்பதாகக் கூறி மருந்து தருவார்கள். அதை எடுத்துக்கொண்டால் தற்காலிகமாக வலி குறையும். இத்தனை ஆண்டுகளும் இப்படித்தான் கடந்தது.