2017 ஆம் ஆண்டில் மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போர்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மஹதி உயிரிழந்தார். மஹதியைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகத் தீா்ப்பளிக்கப்பட்டு, நிமிஷாவுக்கு இந்த மாதம் (ஜூலை) 16 ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது.
நிமிஷாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தும் நோக்கத்தில், அவரின் குடும்பத்தின் கோரிக்கைக்கு இணங்க, மத்திய அரசு தரப்பிலும் பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்பட்டன. எனினும், சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை.
மேலும், யேமன் சட்டவிதிகளின்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இழப்பீடு தொகையை ஏற்றுக்கொண்டால், மரண தண்டனையைத் தவிா்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக நிமிஷாவின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து ரூ.8.60 கோடி வரை (சுமார் 10 லட்சம் டாலர்) திரட்டி இழப்பீடாக வழங்க முயற்சித்தனர்.
இந்த நிலையில், கேரளத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க சன்னி முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏ.பி. அபுபக்கா் முஸ்லியார் மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து, தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, தற்போது நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.