கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் உடல் தகனம்

dinamani2F2025 07 232Fnl929apg2FVS Achuthananthan cremated ed
Spread the love

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் உடல், புன்னப்ரா தியாகிகள் நினைவிடத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் வரவேண்டிய உடல், வழிநெடுக இருந்த கூட்டம் காரணமாக தாமதமாக வந்ததால், இரவு 9 மணியளவில் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, அவரின் மகன் வி.ஏ. அருண் குமார் தகன மேடைக்கு மரியாதை செலுத்தி பூத உடலுக்கு எரியூட்டினார்.

கேரள முன்னாள் முதல்வரும் மார்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன், உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்புக் காரணமாக திங்கள்கிழமை (ஜூலை 21) காலமானார்.

அவரின் உடல் திருவனந்தபுரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட பின்னர், செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலக தர்பார் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முதல்வர் பினராயி விஜயன், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *