கைதில் இருந்து தப்பிக்க புதிய வழியில் பறந்த நெதன்யாகுவின் விமானம்?

dinamani2F2025 09 262F9fap0t5e2FAP25269499159136
Spread the love

இத்துடன், கடந்த 2024 ஆம் ஆண்டு பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது. மேலும், ஸ்பெயின், அயர்லாந்து போன்ற நாடுகளின் அரசுகள் நெதன்யாகு தங்களது நாட்டுக்குள் வந்தால் கைது செய்வோம் என அறிவித்துள்ளன.

இந்த நிலையில், ஐ.நா. அவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் இருந்து விமானம் மூலம் நேற்று (செப். 25) நியூயார்க் நகருக்குச் சென்றடைந்தார்.

இந்தப் பயணத்தின்போது, நெதன்யாகுவின் விமானம் பல ஐரோப்பிய நாடுகளின் வான்வழியைத் தவிர்த்து புதிய பாதையில் பறந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவரது விமானம் வழக்கத்தை விட 600 கி.மீ. கூடுதலாகப் பயணித்துள்ளது.

இதுகுறித்து, விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் இணையதளங்களில் வெளியான வரைப்படங்களில் அவரது விமானம் புதிய பாதையில் பறந்திருப்பது பதிவாகியுள்ளது.

முன்னதாக, ஐ.நா.வின் பொது அவைக் கூட்டத்தில் பிரான்ஸ், பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.

இதையடுத்து, நெதன்யாகுவை கைது செய்ய வேண்டுமென ஐ.நா.வில் பல நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதால், கைது செய்யப்படுவதற்கு பயந்து அவரது விமானம் புதிய பாதையில் பறந்ததுள்ளது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: ஐ.நா.வில் நெதன்யாகு உரை! கூட்டாக வெளிநடப்பு செய்த தலைவர்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *